நீதிபதியிடம் கெத்து காட்டிய டி.எஸ்.பி…………அமர வைத்து டி.எஸ்.பி_க்கு ஆப்பு வைத்த நீதிபதி…!!!

Default Image

நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தரக்குறைவாக நடந்து கொண்ட அவிநாசி டி.எஸ்.பி ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டார்.
Related image
திருப்பூரில், நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தரக்குறைவாக நடந்து கொண்ட அவிநாசி டி.எஸ்.பி. ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
தண்டிக்கப்பட்ட அவிநாசி டி.எஸ்.பி.யான பரமசாமி, கடந்த 10-ஆம் தேதி ஒரு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது, அரசு வழக்கறிஞரின் கேள்விகளுக்கு உரிய தகுந்த பதில் அளிக்காததோடு  மட்டுமல்லாமல் நீதிபதியிடமே கூச்சலிட்டு பேசி, தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜிக்கு உத்தரவிடப்பட்டு, டிஎஸ்பி பரமசாமிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
Image result for COURT
இதன்பேரில் திங்களன்று ஆஜரான டிஎஸ்பி பரமசாமியை, நீதிமன்றம் கலையும் வரை நாள் முழுவதும் நீதிமன்றத்திலேயே  இருக்க வேண்டுமென நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பரமசாமி அங்கேயே இருந்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்