நீட் விவகாரம் :தமிழில் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு மீண்டும் சிக்கல்..!உச்சநீதிமன்றம் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க தடை ….

Published by
Venu

கடந்த மே 6 ஆம் தேதி  தமிழகத்தில் 170 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன் பின்  கடந்த ஜூலை 10 ஆம் தேதி  வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாராணைக்கு வந்தது.இந்த வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி சார்பில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன்,சீனிவாசராகவன் ஆகியோர்  நீட் வினாத்தாள் குளறுபடியால் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார்.

பின்னர் இதை விசாரித்த நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது . 49 வினாக்கள் நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது.49வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.மேலும் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ. கருணை மதிப்பெண் வழங்கி 2வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டது.

கடந்த ஜூலை 16 ஆம் தேதி சிபிஎஸ்இ நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது . தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது .

ஏற்கனவே நீட் தேர்வு எழுதும் போதும் பல்வேறு குளறுபடியால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழக மாணவர்கள் மீண்டும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago