நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பெங்களூரு நித்தியானந்தா பீடத்துக்கு சென்ற மனைவியை காணவில்லை எனவும், அவரை மீட்டுத் தரக்கோரியும் ராமசாமி என்ற விவசாயி மனு அளித்துள்ளார்.
ராமசாமி மனுவில் குறிப்பிட்டுள்ள விவரம்: ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாயி. பெங்களூருவில் உள்ள நித்யானந்தா பீடத்துக்கு தியான வகுப்புக்கு சென்ற எனது மனைவி, மகன் வீடு திரும்பவில்லை என கடந்த மார்ச் 26-ம் தேதி புகார் மனு அளித்திருந்தேன். இதையடுத்து போலீஸார் என் மகனை மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர்