புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆறாவது நாளாக அங்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், மின்சார இணைப்புகள் 70 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் முழுமையாக வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…