திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் நேராக தனது இல்லத்திற்கு சென்றார்.இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை சென்றார்.அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் சென்றனர்.
பின்னர் காவேரி மருத்துவமனைரயில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வரும் துணை முதல்வரும் கேட்டறிந்தனர்.உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சிவி சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது.அவர் நலமாக இருக்கிறார். நானும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நேரில் பார்த்தோம்.மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…