நாகர்கோவிலில் வீட்டில் பணம், செல்போன் திருட்டு…!!

Published by
Dinasuvadu desk

நாகர்கோவிலில் துணிகரம்: வீட்டில் பணம், செல்போன் திருடி விட்டு மர்ம நபர் ஓட்டம்

நாகர்கோவில்,
நாகர்கோவில் வட்டக்கரையை பகுதியை  சேர்ந்தவர் அலோசியஸ் (வயது 54), இவர் அங்கே  கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரும், இவருடைய மகள் ரேச்சல் (24) என்பவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் குதித்து தூங்கிக் கொண்டு இருந்த  ரேச்சல் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த ரேச்சல் திருடன்…திருடன்… என்று கூச்சலிட்டார்.. உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். சத்தம் கேட்டு அலோசியஸ் விழித்துக் கொண்டார்.
பின்னர் தப்பி ஓடிய மர்ம நபர்களை அவர் பிடிக்க முயன்றனர்  ஆனால் முடியவில்லை. தப்பிச் சென்ற மர்ம நபர்கள் அலோசியஸ் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும், ஒரு செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர்.ரேச்சல் விழித்துக்கொண்டதால் அவர் கழுத்தில் இருந்த  நகை தப்பியது..
அலோசியஸ்  வீட்டின் முன்புறத்தில் ஜன்னல் உள்ளது.அந்த ஜன்னல் வழியாக வீட்டு கதவை மர்ம நபர்கள் திறந்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இதுதொடர்பாக நேசமணிநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து வீட்டின் அருகே எங்கேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago