“நடிகர் விஜய் காயம் ” “போலீஸ் தடியடி” மண்டபத்தை சூறையாடிய ரசிகர்கள்..!!

Default Image
புதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்றதிருமண விழாவில் ரசிகர்கள் கூட்டம்நெருக்கியடித்து கலாட்டாவில் ஈடுபட்டதால்மண்டப நாற்காலிகள் சூறையாடப்பட்டன.போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைஅப்புறப்படுத்தி விஜயை பத்திரமாகஅனுப்பிவைத்தனர்.

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

Image result for புதுச்சேரியில் நடிகர் விஜய்

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவார் என்று கூறப்பட்டதால், ஏராளமான விஜய் ரசிகர்கள் கல்யாண மண்டபத்துக்கு படையெடுத்தனர். இதனால் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மேடையை நோக்கி முன்னேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Image result for நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன்நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், கூட்ட நெரிசல்களைத் தாண்டி மண்டபத்துக்கு வந்தார். இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி, பரிசு வழங்கினார். அப்போதும் பலர் நெருக்கியடித்ததால், விஜய்யும், அவரது மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர். பவுன்ஸர்கள் எனப்படும் பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

காலில் லேசான காயமடைந்த விஜய், மனைவி சங்கீதாவின் தோளில் கைபோட்டு, பெரும் சிரமத்துக்கு இடையே மண்டபத்தில் இருந்து வெளியேறினார். மண்டபத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால் போலீஸார் தடியடி நடத்தி, அவரை பத்திரமாக காரில் அனுப்பிவைத்தனர்.
ரசிகர்களின் நெருக்குதல் காரணமாக மண்டபம் அலங்கோலமாக காட்சியளித்தது. சேர்கள் உடைக்கப்பட்டு, காலணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்