நடிகர் ரஜினியாக தான் இப்போது தூத்துக்குடி சென்றுள்ளார்!டிடிவி தினகரன்

Default Image

நடிகர் ரஜினியாக தான் இப்போது தூத்துக்குடி சென்றுள்ளார் என்று ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் தெரிவித்துள்ளார். அவர் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.திமுக  பேரவை புறக்கணிப்பு என்பது முறையற்றது.திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பேரவைக்கு வர வேண்டும்,அவர்கள் புறக்கணிப்பு ஆளும் அரசுக்கு சாதகமாக அமையும் என்றும் ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல்  நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார் . துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்