நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நடிகர் பிரபு, ராம்குமார் நேரில் நன்றி!

Default Image

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நடிகர் பிரபு, ராம்குமார் நேரில் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110 இன் கீழ் வருவாய் பேரிடர் மேலாண்மை துறைகள் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் .

அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பின்னர் நடிகர் சிவாஜி கணேசனை தங்கள் குடும்பத்தில் ஒருவராக லட்சக்கணக்கானோர் கருதுகின்றனர் நடிகர் சிவாஜி கணேசன் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி என்று நடிகர் பிரபு தெரிவித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் பிரபு கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்