தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!

Default Image

தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை   சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா நகர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளிப் பொருட்களை குறிவைத்து திருடுவது அதிகரித்து வந்தன.

இதுகுறித்த புகாரில், அண்ணாநகர் மற்றும் நொளம்பூர் போலிசார் அண்மையில் முருகன், கோவன் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், கொள்ளையடிக்கும் நகைகளை புதுச்சேரியை சேர்ந்த ரகுராம் என்பவருடன் சேர்ந்து உருக்கி கட்டிகளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. வெள்ளிப்பொருட்களை எளிதாக விற்க முடியும் என்பதால், அதை அதிகளவில் திருடியுள்ளனர்.

இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், கோயம்பேட்டில் ரகுராமை கைது செய்துள்ளனர். ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பு வெள்ளி கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ரகுராம் மீது கேரளா, கர்நாடா மாநிலங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்