ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே,நகர் தேர்தலுக்கு முன்னர் ரூ.20 கொடுத்து “அதனை டோக்கனாக வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அதற்கான பணத்தை பட்டுவாடா செய்கிறோம்” என்று தினகரன் சார்பில் கூறியதாக புகார்கள் எழுந்தது. அதன் பின் தற்போது தேர்தல் நடந்து முடிந்து அதில், தினகரன் வெற்றியும் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில், டோக்கனுக்கு பணம் வழங்குமாறு அங்குள்ள மக்கள் டோக்கன் வழங்கிய 6 பேரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து விவரம் அறிந்த போலீசார் அங்கு வருகை தந்து விசாரணையினை மேற்கொண்டனர். பின்பு தாக்குதலுக்கு ஆளான கார்த்திகேயன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இதில் ஈடுபட்ட இருவரினை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…