தேமுதிகவில்  நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள புதிதாக 40 நிர்வாகிகள் விரைவில் நியமனம்!

Published by
Venu

தேமுதிகவில்  நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள புதிதாக 40 நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். கட்சியை பலப்படுத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்களை தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். நிர்வாகிகள் மாற்றம், கூடுதல் மாவட்டச் செயலாளர்கள் நியமனம், தொண்டர்களை மாவட்ட வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தேமுதிக சார்பில் நடத்தப்படும் போராட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.

சென்னையில் கடந்த 29-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், அடுத்தடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கட்சியை பலப்படுத்தும் முறைகள் குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் அரசியல் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, கட்சியின் செல்வாக்கை மீட்க மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு குழுக்களை தயார்படுத்த வேண்டும். இளைஞர்களை கட்சியில் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமின்றி, அந்தந்த பகுதியில் உள்ள முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்த வேண்டும். கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்சியை வளர்ப்பதே முக்கியப் பணியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago