தேனி இளைஞரிடம் ஆன்-லைன் மூலம் ரூ.1.5 கோடி மோசடி …!வழக்கு சிபிஐக்கு மாற்றம் …!
தேனி இளைஞரிடம் ஆன்-லைன் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தேனி இளைஞர் வினோத்குமார் என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆன்-லைன் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.