தேனி அருகே டயர் வெடித்ததால் கோர விபத்து!4 பேர் பலி!

Published by
Venu

 2 பெண்கள் உட்பட 4 பேர்  தேனி அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதியதில் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தேனி அல்லி நகரில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நேற்று பிற்பகல் வேனில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கணவாய் மலைப் பகுதியில் சென்றபோது, எதிரே மதுரையில் இருந்து வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த க.விலக்கு அருகே அரப்படிதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி(42), சுசித்ரா(19), வேனில் வந்த ராமர்(21), செல்லமுத்து(29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் வேனில் இருந்த சிலர் தூக்கி வெளியே வீசப்பட்டனர். இதில், 27 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆண்டிபட்டி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

காயமடைந்தவர்களில் துரைப்பாண்டி, ரமேஷ்குமார், ஆண்டவர் உள்ளிட்ட 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago