தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து உதவி ஆட்சியர் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும் கூட உள்ளே பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படும் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன சேமிப்பகம் ஒன்றில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து ஆய்வு செய்ய உதவி ஆட்சியர் பிரசாத் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, வருவய்த்துறை, காவல்துறையினர் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
கசிவு ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதனிடையே வல்லுநர் குழுவானது ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…