தூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆயுள் கைதி மரணம்?

Published by
Venu

பாரத் ராஜா தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்தவர் . இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 12 ஆண்டுகளாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி தனது அண்ணன் திருமணத்திற்காக தூத்துக்குடிக்கு பரோலில் வந்து உள்ளார்.

கடந்த 22 ம் தேதி ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து 23 ம் தேதி தூத்துக்குடி அண்ணா நகரில் காவல்துறையினர் மீது கல்வீச்சு நடந்தது.

 

இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு வீடுகளில் காவல்துறையினர் உள்ளே புகுந்து அங்கிருந்த ஆண்களை கைது செய்தனர். அப்போது அண்ணா நகர் 12 வது தெருவில் தனது அண்ணன் வீட்டில் இருந்த பரோல் கைதி பாரத் ராஜாவையும் காவல்துறையினர் பலமாக தாக்கி அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது.

காவல்நிலையத்தில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி பாரத்ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைத்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 30 ம்தேதி பாரத்ராஜா,சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

நன்னடத்தைக்காக சிறையில் இருந்து வெளியே வர இருந்த நிலையில் ஆயுள் கைதி பாரத்ராஜா காவல்துறையினரால் தாக்கப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனதாகவும், அதனை மறைத்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் நாடகம் ஆடுவதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஆயுள் தண்டனை கைதி பாரத்ராஜாவின் மரணத்தில் சர்ச்சை நீடிப்பதால் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

58 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago