தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஏன்?முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Published by
Venu

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தூத்துக்குடி சென்று வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அரசு அறிவித்திருந்த நிதியுதவியையும் 52 பேருக்கு அவர் வழங்கினார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர்.

 

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், தீவைத்து கொளுத்தப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தூத்துக்குடி நிலவரம் குறித்து விளக்கினர். இதனைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தூத்துக்குடி வணிகர் சங்கங்கள், மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதையடுத்து, 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையின் கதவுகள் பூட்டப்பட்டு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப் பட்டது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடி செல்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்ய உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆளுநர் ஆறுதல் கூறுகிறார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

5 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago