தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைத்திக்குழு கூட்டம் தொடங்கியது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ககன்தீப் சிங், டேவிதார் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தென் மண்டல ஐ.ஜி. பங்கேற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவும் இதில் பங்கேற்றுள்ளார். மக்கள் பிரதிநிதிகளாக தூத்துக்குடி நகர முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் தூத்துக்குடி தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், பாதிரியார்கள் உள்பட 40 பேர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச்…
கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376…
சென்னை -குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…