தூத்துக்குடி மாணவன் இரண்டாம் இடம் பிடித்து மாநிலஅளவுக்கான போட்டிக்கு தேர்வு..!!
தூத்துக்குடி ,
மாநிலவிளையாட்டு துறை சார்பில் மாவட்ட வாரியாக வட்டு எறிதல் போட்டி நடத்தி மாநில அளவில் விளையாட வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் அகாடமியில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.இதில் பல்லவேறு பள்ளி , கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட தூத்துக்குடி காமாட்சி வித்யாலயம் பள்ளி மாணவன் ஆ.தினேஷ் என்ற மாணவன் வட்டு எரித்தலில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட மாணவன் தூத்துக்குடி லெவஞ்சி புறம் ஆகும்.இந்த மாணவனின் தந்தை ஆறுமுகம் இவர் பெயின்டிங் வேலை செய்து வருகின்றார்.தமிழகளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாணவன் தினேஷ் வீட்டுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் MS முத்து , மாநகர நிர்வாகிகளான முதுகிருஷ்ணன் , காஸ்ட்ரோ , ராம்குமார் ,அருண் , ஜேம்ஸ் ,பாலா ,மற்றும் பலர் பங்கேற்றனர்.வெற்றிபெற்ற தூத்துக்குடி மாணவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கின்றது.அந்த வகையில் வெற்றி பெற்ற மாணவன் தினேஷை வாழ்த்த தினச்சுவடும் கடமைப்பட்டுள்ளது.
DINASUVADU