தூத்துக்குடி மக்களுக்காக ரூ.10 க்கு உணவு வழங்கும் தனியார் உணவகம்…!!

Default Image

தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால்,பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தனியார் உணவகம் சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் போரட்டத்தினால் ஏற்பட்ட கலவரம் காரணமாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும்,அவரது உறவினர்களும் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில் தான் இதனை அறிந்த தனியார் உணவகத்தை சேர்ந்தவர்கள்,10 ரூபாய்க்கு பிரியாணி மற்றறும் சாம்பார் சாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவின் பெயரில் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது மற்றும் நேற்று தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் காவலர்களின் பசியை போக்கும் விதமாக அவர்களுக்கு நோன்பு காஞ்சி வழங்கப்பட்டது.

 

தூத்துக்குடியில் மனிதர்களை மண்ணில் புதைத்த வைத்தவர்களுக்கும் மனித நேயம் காட்டப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்