தூத்துக்குடியில் கடந்த 22ம்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றமான நிலை நிலவியது. நெல்லை, குமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 3 வித வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படைகளில் குமரி உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசாரும் உள்ளனர். இந்த பணிகளுக்காக குமரி மாவட்டத்தில் இருந்து இன்னும் 100க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடியில் உள்ளனர்.
இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களும் தூத்துக்குடியில் முகாமிட்டு இருப்பதால், குமரி மாவட்ட காவல் நிலையங்களில் போலீசாருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரோந்து பணி மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிக்கு கூட ஆட்கள் இல்லை. போதிய டிராபிக் போலீசார் இல்லாததால் நெருக்கடி அதிகரித்த வண்ணம் உள்ளன. ஊர்க்காவல் படையும், ஆயுதப்படை போலீசாரும் தான் முக்கிய சந்திப்புகளில் நின்று போக்குவரத்தை சீரமைக்கிறார்கள். அவர்களும் போதிய அனுபவம் இல்லாதவர்களாக இருப்பதால் நெருக்கடி நேரங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர் .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…