தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவுவதால், மேலும் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, தூத்துக்குடியில் போடப்பட்டிருந்த தடை உத்தரவு இன்று காலை வரை 8 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம், 27ஆம் தேதி காலை 8 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
இதையடுத்து, தூத்துக்குடியில் கருப்பு உடை அணிந்த கமாண்டோக்கள், அண்ணாநகர், திரேஸ்புரம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றனர்.
இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், காயமடைந்தோர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்ட மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவருவதாகவும் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, சிறப்பு கண்காணிப்பு அதிகாரி டேவிதார், தூத்துக்குடியில் சட்டவிரோதமாக யாரும் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்றும், கைது செய்யப்பட்ட 65 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல் கூராய்வு இரண்டாவது நாளாக நடைபெற்றதாகவும், நீதிபதி முன்னிலையில், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, மின்சார வாரியமும் ஸ்டெர்லைட்டுக்கான மின்வினியோகத்தை துண்டித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவசுடன் இணைந்திருங்கள்
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…
சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி…
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே…
கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில்…