தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:எஞ்சியுள்ள 6 பேரின் உடல்களுக்கு நாளையே உடற்கூறு ஆய்வு!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடல்களுக்கு நாளையே உடற்கூறு ஆய்வு நடக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடல்களை பிரேதப்பரிசோதனை செய்ய உத்தர விட்டுள்ளது.  பிரேதப்பரிசோதனை செய்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது

ஏற்கனவே 7 பேரின் உடல்கள் மறு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்