தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

Published by
Venu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.தேசிய மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. பபூல் தத்தா பிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னதாக  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட 3 பேர் உள்பட 10 அரசு அதிகாரிகளிடம் நேற்று  விசாரணை சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று  10 பேரிடம் விசாரணை செய்தது.

முன்னதாக நேற்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 8 பேரின் குடும்பத்தினரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

அவர்களிடம் விசாரிப்பதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் புபுல் புட்டா பிரசாத் தலைமையிலான 5 பேர் குழுவினர், தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.

துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழரசன், சண்முகம், கந்தையா, கார்த்திக், செல்வசேகர், ரஞ்சித்குமார் காளியப்பன், ஜான்சிராணி ஆகிய 8 பேரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி, சந்தேககங்கள் கேட்டறிந்து வாக்குமூலம் பெற்றனர்.

முன்னதாக, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர், தம்மிடம் உள்ள ஆவணங்களை தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார்.

இதனிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவில் இடம்பெற்றுள்ள 2 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவருவோரைச் சந்தித்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த குழுவினர் வரும் 7ஆம் தேதி வரை தூத்துக்குடியில் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும், அதன்பிறகு, தேசிய மனித உரிமை ஆணையத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

11 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

36 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

49 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago