கடந்த மே 30 ஆம் தேதி அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு விவரம்:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று கேட்டால், ஓய்வு பெற்ற விசாரணை அமைத்துள்ளதாக பதில் அளிக்கிறீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பதில் ஏற்புடையது அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது பற்றி வரும் 6 ஆம் தேதி பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முத்து அமுதநாதனும், வழக்கை 9 பேர் குழு விசாரிக்க கோரி கந்தகுமாரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மே 30 ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு நேற்று அல்லது இன்று பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் கோரிய வழக்கில் உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டது .அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…