தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு : தமிழக சட்டப்பேரவைக்கு திமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை!

Default Image

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே இன்று தொடங்குகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 13 பேர் உயிரிழந்தனர். இந்தப் பிரச்னையை பேரவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப முடிவு செய்துள்ளன.

அதற்கேற்றவாறு தற்போது சட்டப்பேரவைக்கு வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். இதனால், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தலைமைச் செயலகத்தில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்