இதுதொடர்பாக, அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் அமைதியை ஏற்படுத்த உதவாது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அரசுத்துறை செயலாளர்கள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகிய இருவருமே நேர்மையான பொறுப்பான அதிகாரிகள் ஆவர். ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல், அமைதியை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் இன்னொரு மோதல் நடந்தால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டு விடும். அதைத் தவிர்த்து அமைதியை ஏற்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்; இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டும்.
தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப்பெற்று மக்கள் சுதந்திரமாகவும், இயல்பாகவும் நடமாட அனுமதிக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மக்களுக்கு ஆட்சியாளர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…
சென்னை - தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தூக்கத்தில்…
ஸ்பெயின் : கால்பந்து போட்டிக்கான பிரீமியர் லீக் தொடர் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஞாயிற்றுக்கிழமை…
ஹைதராபாத் : ஆந்திரா, தெலங்கானாவில் பிரபல யூடியூபராக வலம் வரும் ஹர்ஷா சாய் மீது, ஹைதராபாத் போலீசார் பாலியல் வன்கொடுமை…