தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கதறி அழுத கமல்ஹாசன்..!

Default Image

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேரில் சென்ற கமல்ஹாசன் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது, காயமடைந்தவர்களின் உறவினர்கள் கமல்ஹாசனின் கண்ணீர் விட்டுக் கதறியபோது, கமலும் கண் கலங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், யாரையோ திருப்திபடுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும், அம்பு எய்தவர்களை கண்டறிய வேண்டும் என்றும் கோரினார். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்தித்த வைகோ, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது என்ன நடந்தது? காவல்துறையினர் செயல்பாடு குறித்து அவர்களிடம் வைகோ கேட்டறிந்தார். இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவர்களது உறவினர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்