ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய..!!ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு வருகை..!!ஆட்சியர் சந்தீப் நந்தூரி..!!
ஸ்டெர்லைட் ஆலையில் பஞ்சாப் ஹரியான உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு 2 வாரத்தில் தனது ஆய்வுப் பணிகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடைபெற்று வருகிறது என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் கழிவுகளை அப்புறப்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU