தூத்துக்குடியில் மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்! 8 ஆயிரம் பேர் பங்கேற்பு..!

Default Image

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற கடந்த 22-ம் தேதி முதலே தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தியிருந்தார்கள்.திங்களன்று அவர்கள் ஏழாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மீனவர்கள் சிலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பலரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் தொடர்ந்து மீனவர் பகுதியில் பதற்றம் காணப்படுகிறது.Image result for நாட்டுப்படகு

இதுபோல் நெல்லை மாவட்ட மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம், கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, பெருமணல் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் இடிந்தகரையிலும், கூடங்குளத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கடந்த 23ஆம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை,.இன்றும் 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களது படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்