தூத்துக்குடியில் பாமக நிர்வாகியின் காருக்கு தீ வைப்பு..!

Default Image

தூத்துக்குடியில் பாமக நிர்வாகியின் கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

மாவட்ட பாமக மாவட்டச் செயலாளரான சின்னத்துரை, நேற்றிரவு டூவி புரத்தில் உள்ள தனது கடைக்கு முன் காரை நிறுத்தியிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர்.

இதில் கார் கொளுந்துவிட்டு எரிந்தது. தகவலின்பேரில் வந்த தீயணைப்புகுழுவினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு அமைதி திரும்பி வரும் நிலையில்,மர்ம நபர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்