தூத்துக்குடியில் தொடர்ந்து அத்துமீறும் காவல்துறை ! நீதிபதி கண்டனம்..!

Published by
Dinasuvadu desk
தூத்துக்குடி காவல்துறையின் அராஜகம்…

தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் சட்டவிரோதமாக சிறார்களும் இளைஞர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் இந்தப் பிரச்சனை குறித்து அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

காவல் நிலையங்களை ஆய்வு செய்ய மாவட்ட தலைமை நீதிபதி விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் அவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. வழக்கறிஞர்கள் சங்கம் சொன்னதன் அடிப்படையில் விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அவர் செல்லும் போது சட்டவிரோதமாக அங்கு யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. தனக்கு வந்த தகவலின் அடிப்படையில் விசாரித்த பிறகு அங்கிருந்தவர்களை எல்லாம் மேஜிஸ்திரேட் வருவதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு வல்லநாடு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வல்லநாடு காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். 94 பேர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.Image result for தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் புகைப்படம்

அதன் பிறகு அவர்களெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

30க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள், அவர்களெல்லாம் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இதர இளைஞர்களுக்கு அவர்களின் உடம்பிலுள்ள காயங்களெல்லாம் பதிவு செய்யும் பணி நடந்தது.

மாவட்ட தலைமை நீதிபதி நீதிமன்றத்தின் அருகிலுள்ள தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்திற்கு தானே நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் சட்டத்திற்கு புறம்பாக அங்கும் 40க்கும் மேற்பட்டோர் அடைத்து வைத்திருப்பதை அவர் பார்த்து கடிந்து கொண்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சொன்னதாகவும் தகவலிருக்கிறது.

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் மாவட்ட தலைமை நீதிபதிக்கும் பாராட்டுக்கள். இத்தகைய நடவடிக்கைகள் தூத்துக்குடி மாநகர மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

எல்லா அமைப்புகள் மீதும் நம்பிக்கையிழந்து எதிரிகளால் சூழப்பட்டதுபோல மனநிலையிலிருக்கும் மக்களுக்கு இது ஒரு ஆறுதல்.

மேலும் சில  இடங்களில் காவல்துறை இரவில் சென்று தேடுதல் வேட்டை என்கிற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து சிறியோர் பெரியோர் என்று பாராமல் எல்லாரையும் கைது செய்து வேறு பல பகுதிகளில் அடைத்து வைத்திருப்பதாகவும், மேலும் சில அமைப்பை சேர்ந்த சிலரை காணவில்லை எனவும் தகவல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago