தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது.
கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது.சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி.மாரிராஜா தலைமையில் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100 பேர் தூத்துக்குடி வந்தடைந்துள்ளனர்.இவர்கள் வன்முறை நடந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களில் தடயங்களை சேகரிக்கவும் உள்ளனர்.இவர்கள் தலா 10 பேர்களை கொண்ட குழு 10 ஆக பிரிந்து வட்டாட்சியர்கள்,போலீசார்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…