தூத்துக்குடியில்  துப்பாக்கி சூடு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடக்கம்!

Default Image

தூத்துக்குடியில்  துப்பாக்கி சூடு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது.

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடியில்  துப்பாக்கி சூடு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது.சி.பி.சி.ஐ.டி  ஏ.டி.எஸ்.பி.மாரிராஜா தலைமையில் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100 பேர் தூத்துக்குடி வந்தடைந்துள்ளனர்.இவர்கள் வன்முறை நடந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களில் தடயங்களை சேகரிக்கவும் உள்ளனர்.இவர்கள் தலா 10 பேர்களை கொண்ட குழு 10 ஆக பிரிந்து வட்டாட்சியர்கள்,போலீசார்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்