தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!

Published by
kavitha

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் தொடங்கிய கலவரம் 2வது நாளாக நேற்றும் நீடித்தது. இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவம் வரவழைக்கப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக  மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம்  மற்றும் காவல்துறை அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தடையை மீறி போராட்டக் குழுவினர்   ஆயிரக்கணக்கானோர் நேற்று  முன்தினம் காலையில் தூத்துக்குடி பீச்ரோடு பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.  அவர்களை ஆங்காங்கே போலீசார் தடுத்தபோது  மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.

எனினும் போராட்டக் குழுவினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். இதனால் 3வது மைல் பைபாஸ் சாலையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி  சூடு மற்றும் தடியடியில் 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவங்களால் தூத்துக்குடியே போர்க்களமானது. ஒரு வழியாக மாலை 4 மணிக்கு கலவரம் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கவும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை பார்க்கவும் உறவினர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு திரண்டு  வந்தனர்.

இதன் காரணமாக மருத்துவமனைக்கு வந்த  பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார்  அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசார்  மீது கல்வீசி தாக்கினர். அப்போது திடீரென்று பெட்ரோல் குண்டு  வீசப்பட்டது.  இதனையடுத்து போலீசார் பாளை. ரோடு, விவிடி சிக்னல், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

போலீசார் மீண்டும், ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கி சூடு நடத்தி  இளைஞர்களை  விரட்டினர். இந்த துப்பாக்கி சூட்டில் தாளமுத்துநகர் ஆசைதம்பி நகரை  சேர்ந்த காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலியானவர்கள்  எண்ணிக்கை  11 ஆக உயர்ந்தது. ஜெயராமன் என்பவர் நேற்று மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது குண்டடிபட்டு காயமடைந்தார். இவர் தூத்துக்குடி  அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திங்கள்

Recent Posts

வசூலில் சிக்ஸர் விளாசும் “லப்பர் பந்து”! பட்ஜெட்டை மீட்டு அசத்தல்!!

சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச்…

23 mins ago

பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட நடிகர் எடவேல பாபு ஜாமீனில் விடுவிப்பு!

கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376…

24 mins ago

ஒரு முட்டையும் உருளைக்கிழங்கும் இருந்தா போதும் ..காலை டிபன் ரெடி..

சென்னை -குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான…

29 mins ago

பிவி சிந்துவின் ஆலோசனை பயிற்சியாளரானார் லீ ஹியூன் ! வெற்றிப் பயணம் தொடருமா?

சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து…

2 hours ago

தமிழகத்தில் (26.09.2024) வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாத்து மெதுவா குத்துங்க.. கண்மணிக்கு வலிக்க போகுது.! நயனின் கியூட் வீடியோ.!

சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…

2 hours ago