தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது ..!!பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்….!!

Published by
kavitha

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 100 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு வெளியூர் செல்வோர் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பும் பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ளது. காமராஜர் மற்றும் வ.உ.சி. மார்க்கெட்டுகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் இருந்து காய்கறிகள் வரத்தொடங்கியுள்ளன.

நான்கு நாட்களுக்கு முன்னர், தக்காளி கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் வரை விற்ற நிலையில், வரத்து அதிகரிப்பால் தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. துண்டிக்கப்பட்ட இணைய சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

58 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago