தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அரசின் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் கூறியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 43 பேருக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தூத்துக்குடி நகரத்தில் தற்போது 4 ஐஜி, 4 டிஜஜி, 15 எஸ்.பி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். பேராட்டக்குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் பேசிய புதிய மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் மீண்டும் சகஜ நிலை திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக கடந்த செவ்வாயன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தற்போ-து வரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடியே கொந்தளித்ததையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, டேவிட் தவிதார் ஆகியோரை அனுப்பியது தமிழக அரசு. அவர்கள் தலைமையில் தற்போது தூத்துக்குடியில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…