தூத்துக்குடியில் அத்யவாசிய பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள்..!!இணையம் தான் கட் என்றால் மாநகராட்சி தண்ணீரும் கட்..!!

Published by
kavitha

போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டால் கடந்த 3 நாட்களாக போர்க்களம் போல காட்சியளிக்கும் தூத்துக்குடி நகரத்தில் பொதுமக்களும், செய்தி சேகரிக்க சென்றுள்ள பத்திரிகையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களால் தூத்துக்குடி நகர வீதிகளும், தெருக்களும் நிறைந்துள்ளன. 144 தடை உத்தரவு காரணமாக தூத்துக்குடி நகர மக்கள் வெளியில் இயல்பாக நடமாட முடியாத சூழல் உள்ளது. இதனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மக்களும், பத்திரிகையாளர்களும் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் அதிகாரப்பூர்வமாக 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். களநிலவரங்களையும், மக்களின் துன்பங்களையும் உடனுக்குடன் செய்தியாக கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அவர்களும் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.  தூத்துக்குடியில் இருக்கும் எல்லா பத்திரிக்கையாளர்களும் கிட்டத்தட்ட தண்ணீர் குடித்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மொத்த நகரமும் செயலிழந்துவிட்டது. உணவு இல்லை, இருக்கும் தண்ணீரும் குறைந்து கொண்டே வருகிறது என கூறியுள்ளனர் இந்நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பெரும்பாலான வீடுகளில் குடிக்க தண்ணீர் கூட இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 நாட்களுக்கு முன் பிடித்த தண்ணீரை வைத்து சமாளித்து கொண்டு இருக்கிறார்கள். மாநகராட்சி தண்ணீரும் வரவில்லை, மின்சாரம் இல்லாததால் போர் தண்ணீரும் கிடையாது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

12 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

12 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

12 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

12 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

13 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

13 hours ago