தூத்துக்குடியில்அமைச்சர் கடம்பூர் ராஜூ-ஆட்சியர் உள்ளிட்டோருடன் திடீர் ஆலோசணை..!!

Default Image

தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து, கடந்த 21ம் தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, போராட்டத்தின்போது சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்