தூத்துக்குடி:காவல்துறை பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது..!!-அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!
தூத்துக்குடியில் காவல்துறை பாதுகாப்புடன் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூரில் பள்ளி கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், தேவை ஏற்படுமாயின் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்