தூத்துக்குடி:அமைதி திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

Published by
kavitha

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  போராட்டக்களமாக காட்சியளித்த தூத்துக்குடியில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

தூத்துக்குடியில் ஆட்சியர், எஸ்.பி. மற்றும் சிறப்பு அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பேரில் வ.உ.சி காய்கறிச் சந்தையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஒட்டன் சத்திரம் மற்றும் மதுரையிலிருந்து காயகறி ஏற்றிய லாரிகள் வந்து செல்லத் தொடங்கியதால், மற்ற நகரங்களைப் போன்ற இயல்பான விலையில் காய்கறிகள் விற்கப்பட்டன.

பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. அரசு மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அண்ணா நகரில் 12 தெருக்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. திரேஸ்புரம், மட்டக்கடை, போல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ((gfx 1 out )) இதனிடையே தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago