துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக..!!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

Published by
kavitha

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. மாவட்டத்தில் இயல்புநிலையை  திரும்பி வருவதாகவும் ஆட்சியர் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக அரசால் சிறப்பு அதிகாரிகளாக அனுப்பப்பட்ட ககன்தீப் சிங்பேடி, போக்குவரத்துத்துறை செயலாளர் டேவிதார், தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் உள்ளிட்டோரும் தூத்துக்குடி சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள், பாதிரியார்கள் என பல்வேறு தரப்பினருடனும் காலைமுதலே ஆய்வுக் கூட்டங்களை நடத்தி கருத்துக்களை பெற்றனர்.

 

இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

சட்டவிரோதமாக யாரும் தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை என விளக்கமளித்த அதிகாரிகள் 65 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பிடித்துச் செல்லப்பட்ட 68 பேரிடமும் சட்டபூர்வ நடைமுறைகளை பின்பற்றியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…

12 hours ago

ஐபிஎல் 2025 : “கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க”! ஆர்சிபி ரசிகரை விளாசிய ரிஷப் பண்ட்!

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…

13 hours ago

“முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.,” செந்தில் பாலாஜி உருக்கம்.!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…

14 hours ago

புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி.! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!

சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

15 hours ago

“2026ல் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்வது உறுதி” புஸ்ஸி ஆனந்த் குஷி பேச்சு.!

சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…

15 hours ago

“பிக் பாஸ் போனா டைவர்ஸ் தான்”…வெங்கடேஷ் பட்டை எச்சரித்த மனைவி!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…

15 hours ago