தி.மு.கவின் துரைமுருகன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மனதில் வைத்து எழுப்பிய கேள்வியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
கடந்த முறை வெளியிடப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது குறுக்கிட்ட எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ஜெயலலிதா அறிவித்ததைப் பற்றியும், நீங்கள் அறிவித்ததை பற்றியும் கூறினீர்கள், இடையில் ஒருவர் முதலமைச்சராக இருந்தார், அவர் அறிவித்ததை ஏன் விட்டுவிட்டீர்கள், அவர் பாவம் இல்லையா என கேட்டார்? அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு அக்கறையாக துரைமுருகன் கேட்டதற்கு நன்றி என்று கூறியதோடு, அவரது நோக்கம் புரிகிறது என்றும் குறிப்பிட்டார்.
தங்களின் ஒற்றுமையை பார்த்து துரைமுருகனுக்கு கண் உறுத்துவதாகவும், எவ்வளவு முயற்சி செய்தாலும் தங்களின் ஒற்றுமையை பிரிக்கமுடியாது எனவும் பதிலளித்தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…