துணை முதலமைச்சர் அவர் பாவம் இல்லையா?அவரும் ஒரு முதலமைச்சர் தானே? தி.மு.க. துரைமுருகன்

Default Image

தி.மு.கவின் துரைமுருகன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மனதில் வைத்து எழுப்பிய கேள்வியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

 

கடந்த முறை வெளியிடப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது குறுக்கிட்ட எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ஜெயலலிதா அறிவித்ததைப் பற்றியும், நீங்கள் அறிவித்ததை பற்றியும் கூறினீர்கள், இடையில் ஒருவர் முதலமைச்சராக இருந்தார், அவர் அறிவித்ததை ஏன் விட்டுவிட்டீர்கள், அவர் பாவம் இல்லையா என கேட்டார்? அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு அக்கறையாக துரைமுருகன் கேட்டதற்கு நன்றி என்று கூறியதோடு, அவரது நோக்கம் புரிகிறது என்றும் குறிப்பிட்டார்.

தங்களின் ஒற்றுமையை பார்த்து துரைமுருகனுக்கு கண் உறுத்துவதாகவும், எவ்வளவு முயற்சி செய்தாலும் தங்களின் ஒற்றுமையை பிரிக்கமுடியாது எனவும் பதிலளித்தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்