தீவிரமடையும் மிக்ஜாம் புயல்.! 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.!

Published by
மணிகண்டன்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த புயலானது சென்னையில் இருந்து 290 கிமீ தொலைவில் இந்த புயலானது நிலை கொண்டுள்ளதால் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதன் காரணமாக நிர்வாக காரங்களுக்குகாக “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல்..!

இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 20 செமீக்கு அதிகமாக அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த ரெட் அலர்ட் என்பது அதீத கனமழை பெய்யும் அனைத்து துறைகளும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்படுவதாகும். மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 32 இடங்களில் கனமழையும், 2 இடங்களில் அதிக கனமழையும் பெய்துள்ளது என்றும், மீனவர்கள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வரையில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னைக்கு 290கிமீ வேகத்தில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாகவே டிசம்பர் 5-ஆம் தேதி நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே புயல் கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

9 minutes ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

22 minutes ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

1 hour ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

2 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

3 hours ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

3 hours ago