தீர்ப்பு எப்போது..!! காத்திருக்கும் 18 எம்.எல்.ஏக்கள்

Default Image

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இறுதி வாதம் இன்று முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து ,அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பும்  சமீபத்தில் வெளியானது. இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அவர்களிடம் சென்றது.
சத்தியநாராயணன் தலைமையில் இந்த வழக்கின் முழு விசாரணையும்  பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி வாதம் இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிந்த பின்னர் , தீர்ப்பு வெளியிடப்படும் என்று எதிர் பார்த்த நிலையில்  இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.
தமிழக அரசியல் மாற்றத்திற்க்கான தீர்ப்பாக இருப்பதால் தமிழக மக்களும் ,அரசியல் தலைவர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்…
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்