திருவண்ணாமலை அருகே பிறந்த பெண்குழந்தையை எரித்துக் கொன்றதாக தந்தை கைது!

Published by
Venu

பிறந்த பெண்குழந்தையை  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே எரித்துக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டார். செங்கம் தொகுதிக்குட்பட்ட பாச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

வேண்டாவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. மூன்று குழந்தைகள் பிறந்து விட்டதால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் வேண்டா குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

இதனிடையே பச்சிளம் குழந்தை எரித்துக் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பாச்சல் காவல்துறையினர் குழந்தையின் தந்தை சிவக்குமாரை கைது செய்தனர்.  மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையையும் வளர்க்க முடியாது என எண்ணிய சிவகுமார் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் எரித்துக் கொன்றதாக கூறியதால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது . குழந்தை எரித்துக் கொல்லப்பட்ட இடத்திலும் போலீஸார் தடயங்களை சேகரித்தனர்.

தகவலறிந்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி,  விசாரணை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகமாக உள்ள பெண் சிசுக்கொலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

8 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

34 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago