இரு சக்கர வாகனங்களில் திருவண்ணாமலையில் தப்பிச் சென்ற சென்னையைச் சேர்ந்த கொள்ளையர்களை, 25 கிலோ மீட்டர் தூரம் அசுர வேகத்தில் துரத்திச் சென்று காவல்துறையினர் பிடித்துள்ளனர்.செய்யாறில் போலீசார் வாகன சோதனையில் நிற்காமல் 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். செய்யாறு – காஞ்சிபுரம் சாலையில் மின்னல் வேகத்தில் சென்ற அவர்களை, போலிசார் இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.17 கிலோ மீட்டர் தூரம் விடாது துரத்திய நிலையில், மாங்கால் கூட்டுரோடு சாலையில் இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அப்போது 2 இரு சக்கர வாகனங்கள் போலீசாரின் மீது மோதிவிட்டு தப்பின. 2 பேர் பிடிப்பட்டனர். தப்பிச் சென்றவர்களில் இருவர் அடுத்த 8 கிலோ மீட்டர் தொலைவில் தூசி காவல்துறையினரிடம் சிக்கினர்.
போலீசாரின் பிடியில் 2 பேர் மட்டும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்தனர். பிடிபட்ட 4 இளைஞர்களும் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பருவத மலைக்கு வந்த இவர்கள், அங்கு 2 இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு, வரும் வழியில் ஆரணி பகுதியில் வழிப்பறி கொள்ளையிலும் துணிச்சலுடன் ஈடுபட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் மற்றும் 15 செல்போன்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. வழிப்பறி வழக்கில் ஆரணி போலீசாரிடம் நான்கு இளைஞர்களும் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…