திருப்பூர் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு..!!!நோய் தாக்கும் அவலம்..!!!

Published by
kavitha

திருப்பூர்:மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி சிகிச்சைக்கு, போதியளவு தடுப்பூசி மருந்து இல்லாதது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகரம், அவிநாசி, பல்லடம், பொங்கலுார் உட்பட சுற்றுப்புற பகுதிகளில், சமீப நாட்களாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்களை விரட்டுகின்றன. குறிப்பாக, நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கி ஓடும் பள்ளிக் குழந்தைகளை துரத்திச் சென்றுகடிக்கின்றன.

Related image

நாய்க்கடிக்கு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தான் உகந்தது என்ற நிலையில், நாய்க்கடி பட்ட பலரும், மருத்துவமனை செல்கின்றனர். வெறி பிடித்த நாய், கடித்திருப்பின், ‘ரேபீஸ்’ எனப்படும் உயிர்க்கொல்லி பாதிப்புக்கு ஆளாக வேண்டி வரும். நாய்க்கடி பட்டவர்களுக்கு, ‘ஆன்ட்டி ரேபீஸ் வேக்சின்’ எனப்படும் தடுப்பூசி போடப்படுகிறது; இதன் மூலம், ‘ரேபீஸ்’, தாக்காது.

ஆனால், தாலுகா மற்றும் கிராமங்களில் உள்ள சில அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்து, போதியளவில் இருப்பு இல்லை.பாதிக்கப்பட்டவர்கள், திருப்பூர், கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கே, சிகிச்சைக்கு செல்ல வேண்டியுள்ளது.டாக்டர்கள் கூறுகையில், ‘வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு, அவசியம் ஏ.ஆர்.வி., எனப்படும் தடுப்பூசி போட வேண்டும். கடிபட்ட இடத்தில் ஏற்பட்ட காயத்தை, தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவ வேண்டும்; அந்த இடத்தில், ஏதாவது ஒரு கிருமி நாசினி (டிஞ்சர்) அல்லது ‘ஸ்பிரிட்’ தடவ வேண்டும்; காயத்துக்கு கட்டு போடக்கூடாது’ என்றனர்.மருத்துவப்பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தாலுகா அளவில் உள்ள சில அரசு மருத்துவ மனைகளில், நாய்க்கடி தடுப்பூசி இருப்பு வைக்கப்படுவதில்லை. வளர்ப்பு நாய்களுக்கு தேவையான ஏ.ஆர்.வி., ஊசி மருந்துகளும் போதியளவில் இல்லாததால், அவ்வப்போது மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது,’ என்றனர்.

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உண்டு என்ற நிலையில், நாய்களை பிடித்து, கருத்தடை செய்யும் பணியை, தனியார் அமைப்புகள் தான் மேற்கொள்கின்றன. நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய நிதி ஒதுக்கி, தனியார் அமைப்பினரை ஏற்பாடு செய்வதில், உள்ளாட்சி அமைப்புகள் திணறுகின்றன. இதுவும், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். இவ்விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago