திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் மற்றும் மதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல்!மூவர் கைது

Published by
Venu

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் மற்றும் மதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவர் மற்றும் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இருவர் என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

கடந்த மே 19 ஆம் தேதி  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விமானம் மூலம் திருச்சி வந்தனர். அவர்களை வரவேற்க இரு கட்சி தொண்டர்களும், விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். அப்போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

மோதலை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பிரபு உட்பட 8 பேர் மீது பிரிவுகள் ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல் மதிமுக மாவட்ட செயலாளர் வெள்ளமண்டி சோமு உட்பட ஆறு பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருச்சி விமான நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது  திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் மற்றும் மதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவர் மற்றும் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இருவர் என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago